சென்னை: ஹர்பின் முதல் ஏரோபிளேன் வரை அனைத்திலும் கால் தடம் பதித்த டாடா குழுமம், சுமார் 21.1 பில்லியன் டாலர் மதிப்புடன், இந்தியாவின் அதிக மதிப்பு கொண்ட பிராண்டாக, பிரபல பத்திரிக்கையான பிரான்டு பைனான்ஸ் குளோபல் அறிவித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவானாகிய ஆப்பிள் நிறுவனம் சுமார் 105 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகளவில் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நேற்றைக்கு வெளியிடப்பட்ட உலகின் 500 அதிக மதிப்புடைய பிராண்டுகளின் பட்டியலை பிராண்ட் ஃபைனான்ஸ் குளோபல் 500 என்ற அறிக்கையை வெளியிட்டது, ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் (79 பில்லியன் டாலர்) உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
டாப் 10
ஆப்பிள், சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து முதல் பத்து இடங்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிஸோன், ஜிஇ, ஏடி&டி, அமேசான், வால்-மார்ட் மற்றும் ஐபிஎம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
முதல் இடத்தில் டாடா
இந்தியாவை பொருத்தவரை டாடா குழுமம் அதன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அதன் உலகளாவிய ரேங்கிங்கையும் 2013ஆம் ஆண்டிலிருந்த 39-ஆவது இடத்திலிருந்து உயர்த்தி, தற்போது 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6ஆக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதன் எண்ணிக்கை 5ஆக குறைந்தது என்பது குறிப்பிடதக்கது.
மற்ற 4 நிறுவனங்கள்
டாடாவைத் தவிர்த்து, இத்தரவரிசைப் பட்டியலில் எஸ்பிஐ (347), ஏர்டெல் (381), ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (413) மற்றும் இந்தியன் ஆயில் (474) உள்ளிட்ட இதர நான்கு இந்திய நிறுவனங்களின் குளோபல் ரேங்கிங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
100 முதல் 34 வரை..
டாடாவின் பிராண்ட் மதிப்பு சுமார் 18.2 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 21.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் இது 2007ஆம் ஆண்டில் 100-ஆவது இடத்தில் இருந்த தன் ரேங்கிங்கையும் தொடர்ந்து முன்னேற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாவம் ஐடிசி..
இத்தரவரிசைப் பட்டியலில் இருந்து இவ்வருடம் வெளியேற்றப்பட்ட இந்திய நிறுவனம், 2013 ஆம் ஆண்டின் போது 445-ஆவது இடத்தைப் பிடித்திருந்த ஐடிசி நிறுவனம் ஆகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications