டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, இந்திய வங்கிகள் மோசடியின் காரணமாக கடந்த நிதியாண்டை விட நான்கு மடங்கு அதிக தொகையான ரூ.17,284 கோடி ரூபாயை இழந்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
பெருகி வரும் செயல்படாத சொத்துக்களின் காரணமாக கடன் கொடுத்த வங்கிகள் தடுமாறிய வருகிறது இதனால் 62 வங்கிகள் 26,598 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளன. அதன் படி மோசடி தொகையின் மொத்த மதிப்பு3 வருடத்திற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செலவிற்கான பட்ஜெட் தொகைக்கு சமமானதாகும். (என்ன கொடும சார் இது!! கல்வி கடனை போன் போட்டு, வீட்டிற்கு நோட்டிஸ் அனுப்பி தடாலடியாக கேட்கிறது வங்கி. இதை என்ன செய்யபோகுதாம் வருடக்கணக்கில் வழக்கை நடத்தும்..)
ரூ.4,448 கோடி இழப்பு
பெரும்பாலான வழக்குகளை சிபிஐ அல்லது மாநில காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்குகளில் 75% தனியார் வங்கிகளால் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த வங்கிகள் இழக்கும் மோசடி தொகையின் மொத்த மதிப்பு ரூ 970 கோடி ஆகும். அதே நேரத்தில் மாநில வங்கிகள் ரூ16,314 கோடியை இழக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது 2011-12இல் அனைத்து வங்கிகளும் மோசடியின் காரணமாக இழந்துள்ள மொத்த தொகை ரூ4,448 கோடி ஆகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பலத்தை அடி
ஆர்டிஐ-யின் தகவிலின் படி பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக பாதிப்படைந்துள்ளது. இந்த வங்கி மொத்தம் 13,75 கோடி தொகையினாலான மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளது. கனரா வாங்கி இழந்த தொகை ரூ1,166 கோடி ஆகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட மற்ற பொது துறை வங்கிகள் ரூ1,000 கோடிக்கு அதிகமான இழப்பினை சந்தித்துள்ளன.
தனியார் வங்கியின் நிலை
தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி 5,280 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சிட்டி பேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் முறையே 2,934 மற்றும் 2,568 வழக்குகளை பதிவு செய்துள்ளன. இந்த மூன்று வங்கிகளும் இழந்துள்ள மொத்த மதிப்பு ரூ187 கோடி ஆகும்.
ஆர்பிஐ
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்பிஐ வழங்கியுள்ள புள்ளி விபரங்கள் குறித்து பல வங்கிகள் விவாதித்து வருகின்றன.
கனரா வங்கி
கனரா வங்கியின் செய்தி தொடர்பாளர் 78 வழக்குகளின் மூலம் ரூ583 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.
சென்ட்ரல் பேங்க்
சென்ட்ரல் பேங்க் 156 வழக்குகளில் இழந்த தொகையின் மொத்த மதிப்பு 1,666 கோடி. (சின்ன கல்லு பெத்த லாபம், குறைந்த வழக்கு நிறைய நஷ்டம்)
ஸ்டாண்டர்ட் சார்டர்ட்
ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி ரூ18.85 கோடி ரூபாயை 1,284 மோசடி வழக்குகளில் இழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஒன்றும் விதிவிளக்கல்ல..
ஆர்பிஐ 2,568 மோசடி வழக்குகளில் ரூ.37 கோடி ரூபாயை இழந்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த தகவலை சிட்டி பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை ஏற்று கொள்ளவில்லை.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications