Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி: நைஜீரியாவில் ஈகொனெட் வைர்லெஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் பாரதி ஏர்டெல் தோற்றதாக ஊடகச் செய்திகள் பரவியதையடுத்து அதன் பங்குகள் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டிற்கு செல்ல வழி இருப்பினும், இதன் மூலம் அந்த நிறுவனம் ஈகொனெட் நிறுவனத்திற்கு 3 பில்லியன் டாலர்களைச் செலுத்த நேரிடும்.
நிதிமன்றத்தின் செய்தியறிக்கைகளின் படி, ஈகோனெட் வைர்லெஸ் இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளை விற்ற வழக்கில் பாரதி ஏர்டெல் நிறுவனம் லாகோஸ் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்க்கும் முயற்சியில் தோல்வியடைந்ததாக தெரிவித்ததுடன் ஈகோனெட் வைர்லெஸ் நிறுவனம் ஏர்டெல் நைஜீரியா நிறுவனத்தில் ஒரு உண்மையான பங்குதாரர் எனவும் அறிவித்தது.
இந்தச் செய்தி வெளிவந்தவுடன், ஏர்டெல் பங்குகள் நேற்று வரை சரிந்த வண்ணமே இருந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகத்தை பொருத்தவரை ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லாம்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary