டெல்லி: மத்திய அரசின் மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற உபகரன உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனத்தின் சுமார் 2,685 மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கியது. பொதுவாக எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து பொது துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் வியாழன் அன்று மட்டும் பெல் நிறுவனத்தின் 4.66 சதவீத பங்குகளை எல்ஐசி பெற்றது.
எல்ஐசி நிறுவனம் பொது துறை நிறுவனங்கள் மட்டும் அல்லாது சில தனியார் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும்.
கடுமையான நிதி நெருக்கடியில் பெல் நிறுவனம் சிக்கித் தவித்தது. இதனால் அந்நிறுவனம் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக்ககொண்டு இருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதலில் ஒப்புதல் கிடைத்தது. இதனையடுத்து பெல் நிறுவனம் இப்பங்கு விற்பனையில் இறங்கியது.
மேலும் இப்பங்கு விற்பனைக்கு பெல் நிறுவனத்தின் கனரக தொழிற்சாலைகளுக்கான அமைச்சகமும், பெல் நிறுவன ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெல் நிறுவனத்தின் பங்கு நிலைவரம், ஒரு பங்கின் விலை 10.90 புள்ளிகள் உயர்ந்து 183.70 ரூபாயில் விற்கபடுகிறது.