Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
மும்பை: இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக ஜம்பவானான பில்ப்கார்ட் நிறுவனம் 100 கோடி டாலர் மதிப்பிலான விற்பனையை செய்து நடப்பு நிதியாண்டிற்கான தனது விற்பனை இலக்கை எட்டியது. இதனால் பிலிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
இதேபோல் அமெரிக்காவின் ஆன்லைன் ஜம்பவானான அமேசான் நிறுவனமும் இன்னும் சில நாட்களில் தனது விற்பனை இலக்கை அடைய உள்ளதாக தெரிவித்தது.
"கடந்த மார்ச் 2011ஆம் ஆண்டு 2015ஆம் ஆண்டிற்குள் நாங்கள் 100 விற்பனையை அடைவோம் என அறிவித்தோம், நாங்கள் அறிவித்தது போல் இந்த மிகப்பெரிய இலக்கை அடைந்துவிட்டோம்" என்று பிலிப்கார்ட் நிறுவனத்தின் துனை நிறுவனர் திரு.சச்சின் பன்சால் தெரிவித்தார்.
மேலும் அவர் கடந்த நாங்கள் அடைந்த 100 கோடி டாலர் விற்பனை ஈபே, அமேசான் போன்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும் கடந்த முன்று வருடத்தை ஒப்பிடுகையில் நிறுவனத்தின் விற்பனை 100 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது எனவும் அவர் கூறினார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary