சென்னை: இணையதள நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் பங்கு சந்தையில் குதித்து முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனாலும் பங்கு சந்தையில் இதன் செயல்படு மிகவும் அபாரம். 2013ஆம் ஆண்டு மே 20 அன்று சுமாப் 450-543 ரூபாய் அளவில் பங்கு சந்தையில் விற்பனைக்காக பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது ஒரு பங்கின் விலை 1615.80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.
இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து. மேலும் இந்நிறுவனத்தை நிப்டியின் எஃப் அண்டு ஒ (F&O) பிரிவில் வரும் வியாழன் முதல் சேர்க்க உள்ளனர்
அதேபோல் இன்று நிப்டியிலும் சுமார் 5.50 சதவீத உயர்வை கண்டது.
மேலும் இன்று மும்பை பங்கு சந்தை சரிவை தழுவாமல் தப்பித்தது இதனால் சந்தையில் 29.80 புள்ளிகள் உயர்ந்து 21856.22 புள்ளிகளை அடைந்தது.