டெல்லி: வங்கிகள் நடப்பு நிதியாண்டின் இலக்காக சுமார் 20,000 ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டு இருந்தது. இதன்படி கடந்த டிசம்பர் மாதமே 14,855 நிறுவ வேண்டும் ஆனால் ஏடிஎம் இயந்திர தட்டுப்பாடு நிலவியதால் குறிப்பிட்ட காலத்தில் இந்த இலக்கை அடைய முடியவில்லை. மேலும் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து கிளை வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு ஏடிஎம் இயந்திரத்தையேனும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
2013-14ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தவாறு, நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியாவில் உள்ள 72340 வங்கிக் கிளைகளில் ஏடிஎம் அமைக்க தொடர்ந்து முழுவீச்சில் செயல்படுவதாக வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013ஆம் ஆண்டின் முடிவில் 37,672 கிளைகளில் மட்டுமே ஏடிஎம் இயந்திரம் இருந்தது. இன்னும் 34,668 வங்கி கிளைகளில் அமைக்கும் பணியில் செயல்பட்டு வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவில் 14,855 வங்கி கிளைகளில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 758 சதவீத இலக்கை அடைந்துவிட்டோம் எஞ்சியுள்ள 19,813 இந்நிதியாண்டு முடிவதற்குள் அமைக்கப்படும் என வங்கி துறை உறுதியளித்தது.