மும்பை: ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிய அபிவிருத்தி வங்கி உலகின் நகர்ப்புறம் மற்றும் கடலோர நாடுகளில் சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இதற்கென பிரத்தியேகமாக சுகாதாரம் கூட்டு கடன் நிதியத்தை நிறுவியது. இந்த அமைப்பின் மூலம் தற்போது 3 மிகப்பெரிய திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆசியாவின் நகரங்களிலும், கிராமபுறங்களில் பாதுகாப்பான மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளை ஏற்படுத்தித் தர உதவும் என இந்த அமைப்பு தெரிவித்தது.
பில் கேட்ஸ்
ஆசிய அபிவிருத்தி வங்கி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ் அவர்களில் குடும்ப அறக்கட்டளையான பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையிடம் 15 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது.
28 மில்லியன் டாலர்
மேலும் மற்ற சில நிறுவனங்களின் மூலம் மொத்தம் 28 மில்லியன் டாலர் வரை கடன் பெற்று இந்த சுகாதார வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்யது வருகிறது.
புள்ளிவிவரம்
மேலும் சுகாதாரம் கூட்டு கடன் நிதியத்தின் அறிக்கைப்படி இன்னும் ஆசியாவில் 1.7 பில்லியன்மக்கள் பாதுகாப்பற்ற கழிப்பறையும், 780 மில்லியன் மக்கள் திறந்த வெளியிலும் தங்களது காலை கடனை கழிக்கின்றனர் என் தெரிவித்தது.
இந்தியா
இந்த திட்டங்களில் வங்காளம், இந்தியா, நேபால், இலங்கை ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் மேம்படுத்த இந்த அமைப்பு களமிறங்கியுள்ளது.
தனிமனித கோபம்..
சரியான சகாதார வசதி கூட இந்தியாவில் இல்லை என்றால் இந்தியா எப்படி 2023ஆம் வருடம் வல்லரசு நாடாக உருமாறும்.


Click it and Unblock the Notifications