ரூ.74,000 கோடி முதலீட்டில் புத்துணர்வு பெறும் விமான போக்குவரத்து துறை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: இந்தியாவில் உள்நாட்டு பிராந்திய மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வான்வழி இணைப்பின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இத்துறையை விரிவாக்கம் செய்ய விமான போக்குவரத்து துறை எண்ணியுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இத்துறையை மேம்படுத்துவதற்காக சுமார் 74,000 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், சுமார் 56,700 கோடி ரூபாய் வரையிலான தொகை தனியார் துறையின் பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"விமான போக்குவரத்தின் அடர்த்தியைப் பொறுத்தவரையில், சீனாவின் 282, பிரேஸிலின் 231, மலேஷியாவின் 1,225 மற்றும் அமெரிக்காவின் 2,896 ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் 72 என்பது மிகவும் குறைவான அளவே. அதிகம் கண்டு கொள்ளப்படாத இந்த சந்தையை மேம்படுத்தினால் நற்பயன்களை அள்ளிக்கொடுக்கவல்ல அதன் ஆற்றலையே இது காட்டுகிறது," என்று சிவில் ஏவியேஷன் அமைச்சரான அஜித் சிங் கூறியுள்ளார்.

சலுகைகள்

சலுகைகள்

இந்திய ஏவியேஷன் காட்சியின் நான்காவது பதிப்பை கடந்த புதன்கிழமையன்று துவக்கி வைத்துப் பேசிய அவர், ரீஜனல் அண்ட் ரிமோட் ஏரியா ஏர் கனெக்டிவிட்டி பாலிஸியில் விமானங்களை இயக்கக்கூடிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பல்வேறு நிதி சார்ந்த மற்றும் இதர சலுகைகளை வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைவு விலை விமான நிலையம்

குறைவு விலை விமான நிலையம்

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா குறைவு விலை விமான சேவைகளுக்கு ஏற்றவாறு சுமார் 50 குறைவு விலை விமான நிலையங்களை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. கைதேர்ந்த பணியாளர்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் சிவில் ஏவியேஷன் பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.

வரி குறைப்பு

வரி குறைப்பு

தி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி (எஃப்ஐஸிஸி) மற்றும் ஏவியேஷன் துறை ஆகியவை, கடினமான வரி விதிப்பினால் இத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளன. இத்துறை வளர்ச்சியடைய வேண்டுமெனில், வரிக்குறைப்பு மிகவும் அவசியம் என்பதையும் இந்த சேம்பர் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏரிபொருள்

ஏரிபொருள்

எஃப்ஐஸிஸியின் தலைவராகிய சித்தார்த் பிர்லா, சுமார் 4 முதல் 30 சதவீதம் வரை விதிக்கப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் மீதான வரியை சுட்டிக்காட்டி, "இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் வரையிலான அதிகமான விலைக்கு இதுவே காரணமாகும்" என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

₹74,000 crore needed to develop aviation sector

India has set its eyes on the domestic regional and remote area connectivity to expand the sector. An estimated ₹74,000 crore will be pumped in to develop the airport sector in the next few years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X