டெல்லி: எஃகு உற்பத்தியிலும், தயாரிப்பிலும் இந்திய நாடு முன்னிலையில் இருந்தாலும், உருக்குப் பொருட்களின் தேவையை சமாளிக்க அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டு உருக்கு பொருட்களின் இறக்குமதி 7 மடங்கு அதிகரித்து 5 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளன. இதே தருனத்தில் இந்தியாவின் உருக்கு பொருட்களின் தேவை 23 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி அதிகரிக்கும் போது வர்த்தகம் பற்றாக்குறை அதிகளவில் பாதிக்கும் எனவும், மிகுதியான அன்னிய முதலீடு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க
2011-2013 வரை நடந்த உருக்குப் பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், இறக்குமதியின் அளவே மிகுதியாக இருந்தது, நாட்டின் பணவீக்கத்திற்கு இந்த உருக்குப் பொருட்களின் இறக்குமதியும் மிகுதியான பங்கு உண்டு எனவும் கூறலாம்.
கடுமையான சட்டதிட்டகள்
கடந்த நிதியாண்டில் நாட்டின் உருக்கு பொருட்களின் இறக்குமதி 79 டன்னாக இருந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும், வர்த்தக பற்றாக்குறையின் காரணமாகவும் மத்திய அரசு உருக்கு பொருட்களின் இறக்குமதிக்கு கடுமையான சட்டதிட்டகளை வகுத்தது.
இறக்குமதி குறைந்தது
இத்தகைய சட்ட திட்டங்களால் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் உருக்கு பொருட்களின் இறக்குமதி 28 சதவீதம் குறைந்து, 37 டன்னாக உள்ளது.
விற்பனை குறைந்தது
பொருளாதார மந்தநிலை மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் உள்நாட்டில் உருக்கு பொருள்கள் விற்பனை குறைந்துள்ளது. எனவே, உருக்குத் துறை நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும்.