துபாய்: ஓமான் நாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டின் தேசிய மயமாக்கல் மற்றும் புதிய விசா கட்டுப்பாடுகள் ஆகிய காரணங்களால் கடந்த மூன்று மாதங்களில் மிகவும் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் மற்றும் எத்தியோப்பிய நாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் ஓமான் பத்திரிக்கையின் அறிக்கை அந்த நாட்டின் தேசிய புள்ளி விவர மையத்தின் விவரங்களை மேற்கோள்காட்டி இதை தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 1000பேருக்கு மேல் பணிநீக்கம்
அந்த அமைப்பின் விவரப்படி, 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 599,473 பேராக இருந்த இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 0.1 சதவிகித அளவிற்கு குறைந்து 598,674 பேராக பதிவாகியுள்ளது.
நவம்பர் மாதம்
2013ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 600,349 ஆக இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாத்த்தில் 0.1 சதவிகிதம் குறைந்து 599,473 ஆக பதிவானது.
மனிதவள அமைச்சகம்
இது வருடத்தின் முதல் மாதமாதலால், மனித வள அமைச்சகம் சில வெளிநாட்டு வேலையாட்களுக்கான பணிகளுக்குத் ஒரு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்திய தூதரகம்
மேலும், விசா தொடர்பான விஷயங்களில் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. வெளி நாட்டுப் பணியாளர்கள் குறைவுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு, இவை காரணமாக இருக்கலாம் என அந்நாட்டின் இந்திய தூதரகம் குழு வழக்கறிஞர் தீபா சுதிர் தெரிவித்தார்.