பெய்ஜிங்: சீனாவுடனான உள்கட்டமைப்பு மற்றும் வணிகம் குறித்த பேச்சு வார்த்தை இன்று நடந்தது, இதில் 2015ஆம் ஆண்டிற்குள் இந்தியா சீனா இடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலர் அளவிற்கு உயரும் என இன்று திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங்க அலுவாலியா தெரிவித்துள்ளார்

நடப்பு நிதியாண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சீனாவிற்கு ஏற்றுமதி குறைவாலும் அந்நாட்டுடன் செய்யப்பட்ட வர்த்தகம் 6,700 கோடி டாலராக குறைந்தது.
கடந்த முன்று ஆண்டுகளில் சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா 3,500 கோடி டாலர் வர்த்தகத்தை பற்றாக்குறையாக சந்தித்துள்ளது. மேலும் இப்பற்றாக்குறையை குறைக்கும் வகை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங்க அலுவாலியா தெரவித்தார்.
இப்பற்றாக்குறையை குறைக்க ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள், ஆடை ஏற்றுமதி, மரச் சாமான்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications