டெல்லி: கடந்த 5 வருடத்தில் கடன் பெருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதிலும் 30 வயதிற்குள் இருக்கும் மக்கள் அதிகளவில் கடன் பெறுவதாக சிபில் அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக 2008ஆம் ஆண்டு கடன் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 7 சதவீதம் மக்கள் 30 வயதிற்கு குறைவானவர்களே இந்த அளவு தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என சிபில் அறிக்கை தெரிவிக்கிறது.
இளைய தலைமுறையினர் அதிகளவில் கடன் பெறுவதற்கான காரணத்தை என்னவென்று பார்த்தால், இளைஞர்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலை பரிப்போனதால் நிதி தேவையை சமாளிக்கவும் கடன் பெறுவதாக இந்த அறிக்கையில் சிபில் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், 2008-09ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் இருந்தது, தற்போது இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் 15 முதல் 35 வயதுடைய மக்களின் வேலை செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 50 சதவீததமாக இருந்தது, ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.