மன்க்ஹுர்ட்(மும்பை): மும்பையில் குடிநீர் மிகவும் மாசடைந்துள்ளதால் மக்களின் உடல்நிலை கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையை களையும் வகையில் ஹெய்-டெக் முறையில் குடிநீரை விநியோகம் செய்ய ஆதாயம் இல்லாத நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஆதாயம் இல்லாத நிறுவனமான வந்தனா பவுண்டேஷன் என்னும் நிறுவனம் மும்பை வாழ் மக்களுக்கும் ஏடிஎம் வசதியுடன் கூடிய குடிநீர் வழங்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் "அக்குவாடிம்" (AQUATM).
புதிய முயற்சி
இந்த குடிநீர் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் "ஒரு நாளில் சுமார் 1000 லிட்டர் அளவு விநியோகம் செய்யும் திறன் கொண்டது. மேலும் இதன் அதிரடி விலையாக ஒரு லிட்டர் குடிநீர் 1 ரூபாய்" என விநியோகம் செய்ய துவங்கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டு முயற்சி
வந்தனா பவுண்டேஷன் மற்றும் அக்குவாகிராப்ட் என்ற இரு நிறுவனங்களும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மும்பை
இந்த இயந்திரத்தை மும்பையில் மன்க்ஹுர்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ரீபெய்டு கார்டு
மேலும் குடிநீரை கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு மட்டும் அல்லாது ப்ரீபெய்டு கார்டுகள் மூலமும் செயல்படுத்த முடியும் என இந்நிறுவனம் தெவித்துள்ளது.