மும்பை: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னாரான கே.சி. சக்ரவர்த்தி தனது பதவி காலம் 3 மாதம் இருப்பினும், திடீரென ராஜினாமா செய்தார். இந்தியாவில் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவரின் ராஜினாமா ரிசர்வ் வங்கியில் சலசலப்பு ஏற்படுத்தியது.
மேலும் ரிசர்வ் வங்கி கே.சி. சக்ரவர்த்தி-யை ஏப்ரல் 25ஆம் தேதி வரை பணியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டது, இதன் படி இன்று அவர் ராஜினாமா செய்தார்.
இவரின் இடத்தை நிரப்ப 6 பொது துறை வங்கிகளின் தலைவர்களின் பெயரை ரிசர்வ் வங்கியின் சிறப்புக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இம்மாத கடைசியில் இவர்களை நேர்முக தேர்வுக்கு உட்படுத்தபட்டு தகுந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அந்த 6 பேர் கொண்ட பட்டியலை இங்கு காண்போம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் கே.ஆர். காமத்
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் வி.ஆர். ஐயர்
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் எஸ்.எஸ். முந்த்ரா
கனரா வங்கி
கனரா வங்கியின் தலைவர் ஆர்.கே. துபே
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் எம். நரேந்திரா
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியன் தலைவர் எஸ்.எல், பன்சால்
பதவி காலம்
புதிதாக தேர்ந்தெடுக்கும் ரிசர்வ் வங்கியின் துணை தலைவர் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கலாம், அல்லது 62 வயது வரை இப்பதவியில் தொடரலாம்.