மும்பை: ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இந்நாளில் ரிசர்வ் வங்கி வெளியீடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையை எதிர்பார்த்து நிதி வல்லுனர்கள், முதலீட்டாளர், கார்ப்ரேட் நிறுவனம் என பல தரப்பினர் உள்ளனர். இந்த அறிக்கையின் சிறப்பாக ரிசர்வ் வங்கியின் முக்கிய கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்
இந்திய பொருளாதாரம் மந்தமாக இருக்கும் வேளையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் மிகப்பெரிய அச்சுருத்தலாக இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் செய்ய சில முயற்சிகள் மூலம் மொத்த விலை பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்தது.
சில்லரை பணவீக்கம்
சில்லரை பணவிக்கம் கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 8.1 சதவீதமாக குறைந்தது, இதனால் பொருளாதாரம் மந்தநிலை விட்டு சற்று உயர துவங்கியது.
பொருளாதார வளர்ச்சி
சர்வதேச பொருளாதார மந்தநிலையால் கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வட்டி உயர்வு
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பலமுறை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி உயர்த்தியதால் பொருளாதார வளர்ச்சி பாதித்தது, இருந்தாலும் இம்முயற்சி பொருளாதார வீழ்ச்சியை கட்டுக்குள் கொண்டு வந்தது.
நிறுவனக் கடன்
ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடும் அறிக்கையில் முக்கியமான நிறுவனக் கடன்களுக்கு வட்டி வகிதத்தை குறைக்க ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications