லண்டன்: பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய நிறுவனங்களுக்கு பெரு பங்கு உள்ளதாக அந்நாட்டின் ஆய்வு நிறுவனமான கிராண்டு டிரான்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பிரிட்டன் நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்களை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த புதிய தகவல் இந்நிறுவனத்திற்கு கிடைத்தது.
இந்த ஆய்வு நிறுவனம் இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிரிட்டனில் செயல்படும் இந்திய நிறுவனங்களின் வளமை, அட்கள் பலம் போன்ர பல விடிவங்களில் ஆய்வு மேற்கொண்டது.
இந்திய நிறுவனங்கள்
பிரிட்டனில் சுமார் 700 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சிறு மற்றும் பெரு நிறுவனங்களும் அடக்கம். மேலும் இதில் 1 இலட்சம் பணியாளர்கள் மேல் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
நிறுவன வளர்ச்சி
இதில் 41 நிறுவனங்களில் நிறுவன வளர்ச்சி மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்ந்து வருகிறது. அதே போல் இந்தியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் 26 பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி 20 சதவீதமாகும்.
டாப் 40
இந்த 700 நிறுவனங்களில் 40 நிறுவனங்களின் வருவாய் மட்டும் 19 பில்லியன் பவுண்டு. இந்த 40 நிறுவனங்களில் 5 கார்ப்பெரேட் நிறுவனங்கள், 17 நடுத்தர நிறுவனங்கள் மற்றும் 19 சிறு நிறுவனங்கள் பிரிட்டன் நாடு முழுவதும் செயல்படுகிறது.
பிரட்டன் பொருளாதாரம்
இந்த 700 நிறுவனங்களின் வளர்ச்சி, தயாரிப்பு நாட்டின் மொத்த உற்பத்தியில் 7 சதவீதம் கொண்டது குறிப்பிடதக்கது.
இந்திய முதலீடு
இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை கண்டு இந்தியா, அமெரிக்க போன்ற பல நாடுகள் பிரிட்டனில் முதலீடு செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது, இதனால் அன்னிய செலவாணி கணிசமான அளவு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.