மும்பை: இந்திய பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான நிலை என்ற நிலை எதும் இல்லை. அன்னிய செலவாணி எவ்வளவு அதிகாரித்தாலும் இந்திய பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான நிலை இல்லை என்று அழுத்தமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெவித்தார்.
இந்தியாவில் அதிகப்படியான அன்னிய செலவாணி உள்ளது, தற்போதிய நிலவரப்படி 300 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ளது, இந்த அளவீடு 400, 500, 600 பில்லியன் டாலராக உயர்ந்தலும் இந்தியா பொருளாதாரம் பாதுகாப்பான நிலையை அடையாது என அவர் தெரிவித்தார்.
சரி ராஜன் இந்திய பொருளாதாரம் எப்போது அந்த பாதுகாப்பான நிலை அடையும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், சீனாவின் அன்னிய செலவாணியை விட இந்தியவின் அன்னிய செலவாணி அதிகரிக்கும் போது இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக பாதுகாப்பான நிலையை அடையும் என்று தெளிவான பதிலை அளித்தார் ரகுராம் ராஜன்.
சீனாவின் அன்னிய செலவாணி
செப்டம்பர் 2013ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் அன்னிய செலவாணி 3.66 டிரில்லீயன் டாலர் , 2014ஆம் ஆண்டின் ஜனவரி மாத தகவலின் படி இந்தியவுடைய அன்னிய செலவாணி 2.91 பில்லியன் டாலர் மட்டும். (சீனாவின் நிலையை அடைய நாம் இன்னும் பல தரப்பட்ட துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இந்த வித்தியாசம்)
ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் பதவி விளகிய பின்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவி பொருப்பில் அமர்த்தப்பட்டார். அப்போது இந்தியாவின் அன்னிய செலவாணி 2.5 பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் அன்னிய செலவாணி அதிகரிக்க, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பான பாலிசிகளை உருவாக்க வேண்டும். இது தான் சிறந்த வழி என நான் கூறுவேன் என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
பணச் சந்தை
பணச் சந்தையில் நிலவும் ஸ்தரமற்ற தன்மையை சரி செய்யவே ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. மேலும் பணச் சந்தையில் அதிகப்படியான பரிமாற்றத்தை செய்ய ரிசர்வ் வங்கி சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.