சீனா: விற்பனையில் சிரிவு, நிதி பற்றாக்குறை, தொழிற்சாலை அரசு கைபற்றுதல், வரி நிலுவை என சிக்கலில் சிக்கித்தவிக்கும் நோக்கிய நிறுவனம் தனது சீனா விற்பனை உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் சீனா அதிகாரிகளின் அனுமதியுடன் இன்று கைமாற்றியுள்ளது. மேலும் இந்த ஏப்ரல் மாதத்தின் முடிவில் நோக்கியா நிறுவனத்தின் விற்பனை உரிமம் காலம் முடிவடைகிறது.
இந்த உரிமம் விற்பனையின் மதிப்பு சுமார் 5.4 பில்லியன் யூரோ மதிப்புடையது.
இது குறித்து நோக்கிய நிறுவனம் கூறுகையில், விற்பனை பரிமாற்றத்திற்கான ஒப்புதலை சீன அரசு, ஐரோப்பிய ஆணைக்குழு, அமெரிக்க நீதித் துறைகளிடம் ஒப்புதல் பெற்றது என நோக்கியா நிறுவனம் தெரிவித்தது.
இந்த விற்பனை உரிமம் பரிமாற்றத்தால் நோக்கிய நிறுவன பங்குகள் ஐரோப்பிய சந்தையில் 2.4 சதவீதம் உயர்ந்து 5.44 யூரோக்குளுக்கு விற்கப்பட்டது.