மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் திங்கட்கிழமை புதிய 10 ரூபாய் தாள்களை வெளியீட திட்டமிட்டுள்ளது. இந்த ரூபாய் தாள்களின் சிறப்பு என்று பார்க்கும்போது, இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. மேலும் இதில் இந்த "" சிறப்பு அடையாளத்தை மேல்புறமாகவும், கீழ்புறமாகவும் அச்சிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இது குறித்து ரிசர்வ் வங்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிடும் 10 ரூபாய் தாள்கள் மகாத்மா காந்தி 2005 வரிசையை சார்ந்தது, மேலும் இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்து அச்சடிக்கப்பட்டு இருக்கும், மேலும் பின்புறத்தில் ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் வருடமான 2014வும் அச்சிடபட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்தார்.
மேலும் ரூபாய் தாள்களின் டிசைனில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி விவரித்தார்.