மும்பை: கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள வங்கிக் கிளைகளின் மூலமாக ரூ.10 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் அரசு மற்றும் காவல் துறை இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தில் இல்லை என்று சில நேரம் சொல்லத்தான் செய்கிறது. சில நேங்களில் காவல் துறை கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சில ஆசாமிகளை பிடிக்கத்தான் செய்கின்றனர்.
இந்திய வங்கி துறை
பொதுவாக கள்ள நோட்டுகளை சில்லரை வர்த்தகத்தில் தான் பயன்படுத்துவார்கள், ஆனால் இப்போது கள்ள நோட்டுகளை வங்கிகளிலேயே பயன்படுத்துகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது துறை வங்கிகளில் சுமார் 10 கோடி அளவிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதாக ஐசிஐசிஐ வங்கி காவல்துறையில் புகார் செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
மேலும் இந்த புகாரில் 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில் மிகவும் அதிகம்
இந்தியாவில் தென் பகுதிகளில் மிகவும் குறைவான அளவே கள்ள நேட்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. (தென் இந்திய காவல் துறைக்கு நன்றி) மேலும் உத்தரப்பிரதேசம், உத்திரகாண்டில் அதிகளவில் இருப்பதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.
10.77 கோடி ரூபாய்
வங்கித்துறையில் இது வரை 10.77 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியன் புள்ளி விபரங்கள் கூறுகிறது.