மும்பை: இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததை அடுத்து சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அமெரிக்க-இந்திய செலாவனி மாற்று வர்த்தக விதிகளை தளர்த்தியுள்ளது.
ஆர்பிஐ-யின் ஆலோசனைப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான செலாவனி மாற்று பரிவர்த்தனைகளின் தொடக்க லாபங்களின் விகிதங்களையும், மிக அதிகமான நட்ட விகிதங்களையும் இரண்டு மடங்காக மாற்றியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வேறுபாடுகளை சந்தித்ததோடு அதன் மதிப்பு ரூபாய் 70 வரை உயர்ந்ததையடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 60 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்து, சாதாரண நிலைகளை அடைந்ததைத் தொடர்ந்து கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு லாப விகிதங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
செபி இன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில், "அமெரிக்க செலாவனி மாற்று ஒப்பந்தங்களில் லாப விகிதங்களை முன்பிருந்த நிலைக்கு அதாவது 2013 ஜுலை 8 ஆம் தேதிக்கு முன்பிருந்த விகிதங்களுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.