கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் 50,000 டீமேட் கணக்குகள் முடக்கம்!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் துவங்கிவிட்ட நிலையில் இந்தியாவில் பல துறைகளில் வர்த்தகம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதன் எதிரொலியாக கடந்த முன்று மாதங்களுக்கு முன்பு மும்பை பங்கு சந்தை 18,000 புள்ளிகளில் இருந்தது, ஆனால் இப்போது 22,500 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் நிஃப்டியில் 5500 புள்ளிகளில் செய்யப்பட்ட வர்த்தகம் இப்போது 6800 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் 50,000 டீமேட் கணக்குகள் முடக்கம்!!

இந்நிலையில் தேர்தல் காலத்தையொட்டி இந்தியாவில் அதிகளவில் கருப்புப் பணம் புழங்குவதாக மத்திய அரசிற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி துணையுடன் மத்திய அரசு கருப்பு பணத்தை களைய ஒரு குழுவை அமைத்தது.

இதனால் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் சில சந்தேகத்திற்குரிய டீமேட் கணக்குகளை குழு முடக்கி வருகிறது. இதனால் தற்போது பிப்ரவரி -மார்ச் இடையிலான காலகட்டத்தில் இக்குழு சுமார் 53,000 டீமேட் கணக்குகளை முடக்கியது குறிப்பிடதக்கது. (மிகவும் சரியான நடவடிக்கை. இந்த தேர்தல் காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பிஸியாக இருப்பார்கள் இதனை பயன்படுத்தி சில ஆசாமிகள் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பெரும் புள்ளிகளின் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை பங்கு சந்தை முதலீடு, அன்னிய முதலீடு போன்ற முதலீட்டு திட்டத்தின் கீழ் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர்.)

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+