மொபைல் கட்டணத்தை 20% உயர்த்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!!

மும்பை: ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கட்டணங்கள் மாற்றப்படும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே ஒரு நொடிக்கு 1.5 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 1.6 பைசாவாக மாற்றப்படும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குருதீப் சிங் தெரிவிக்கையில் "வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்த உள்ளோம், இதனால் அவர்களுக்கு பெருமளவில் செலவுகள் எதும் ஏற்படாது. இதுமட்டும் அல்லாமல் சிறப்பான் சேவைகளை அளிக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.

நிறுவன வருவாய்

நிறுவன வருவாய்

இந்த கட்டண உயர்வு நிறுவனத்தின் வருவாய்களில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். இதன் எதிரொலி இன்னும் 3 மாதங்களில் தெரியவரும்

கட்டண உயர்வு

கட்டண உயர்வு

தொலைதொடர்பு வல்லுனர்கள் கூறுகையில், இந்த கட்டண உயர்வு அனைத்து நிறுவனங்களுக்கும் லாபமானதாகவே உள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் அடையும் என தெரிவித்தனர்.

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, வோடபோன் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது, இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இதில் அடக்கம். மேலும் இலவச நிமிடங்கள் வழங்குவதில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிகளவில் வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+