நொய்டா: ஐடி துறையில் கடந்த இரண்டு வருடமாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இன்று 2014ஆம் நிதியாண்டின் 4ஆம் காலாண்டு அறிக்கைக்கையை வெளியிட்டது. நிறுவனத்தின் செயல்பாடுகளை போலவே நிறுவனத்தின் லாபம் சுமார் 59 சதவீதம் உயர்ந்துள்ளது. நான்காம் காலாண்டிற்கான லாபம் மட்டும் 1,624 கோடி.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஷிவ் நாடார் தலைமையில் நொய்டா-வை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி முதலீட்டாளர் கண்களில் தீப்பொறி பறக்கிறது என்றே கூறலாம். இதனால் கடந்த வருடம் ஏப்ரல் 30ஆம் தேதி 673 ரூபாயிக்கு விற்கப்பட்ட இந்நிறுவன பங்குகள், தற்போது 1432.00 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
வருவாய்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்தச வருடம் 6430 கோடி என்ற அளவில் இருந்தது, ஆனால் இந்த வருடம் சுமார் 30 சதவீதம் உயர்ந்து 8349 கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
நிகர லாபம்
இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய ஐடி நிறுவன ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட 40 சதவீதம் உயர்ந்து 3246 கோடி வரை உயர்ந்ததுள்ளது.
ஷிவ் நாடார்
நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடுகையில் பேசிய ஷிவ் நாடார் "ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பிற நிறுவனங்களை போல செயல்படுவதில்லை, இந்நிறுவனம் சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து அதிகப்படியான ஆடர்களை பெற்றுள்ளதால் சிறப்பான வளர்ச்சியுடன் நிலையான லாபங்களுடன் உள்ளது."
பணியாளர்கள்
இந்நிறுவனத்தில் தற்போது 84,403 பணியாளர்கள் உள்ளனர், இது கடந்த 2004ஆம் ஆண்டில் 90,190 பணியாளர்கள் இருந்ததாக இந்நிறுவனத்தின் தகவல்கள் கூறுகிறது.