டெல்லி: இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டின் நிடோல் நிலாய் குமுமத்துடன் இணைந்து ஒரு புதிய உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இருநிறுவனங்களும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 240 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்த கூட்டு முயற்சியில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் 55 சதவீத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும், மதிமுள்ள 45 சதவீதம் நிடோல் நிலாய் குழுமம் பெற்றுக்கொள்ளும். இந்த தொழிற்சாலை வருடத்திற்கு சுமார் 150,000 வாகனங்களை தயாரிக்கு திறன் கொண்டவையாக உருவாக்கப்படும் என ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பவன் முஞ்சால்
இதுகுறித்து ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனத்தின் சிஈஓ மற்றும் தலைமை நிர்வாகியான பவன் முஞ்சால் கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி நிறுவனத்திற்கு ஒரு மையில்கல்லாக அமையும். மேலும் இந்தியாவை விட்டு பிற நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலையை முதன் முறையாக அமைக்கிறோம். " என்று பெருமிதமாக தெரிவித்தார்.
சந்தை கைபற்றுதல்
இதன் மூலம் 2015-16ஆம் நிதியாண்டில் பங்களாதேஷில் சுமார் 20 சதவீத சந்தையை கைபற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான திட்ட வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் பவன் முஞ்சால் தெரிவித்தார்.
நிடோல் நிலாய் குழுமம்
இந்நிறுவனம் பங்களாதேஷில் பல துறைகளில் செயல்படுகிறது, குறிப்பாக இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனகளை நாடு முழுவதும் விநியோகம் செய்துவருகிறது.
பங்கு சந்தை
இந்த செய்தியை வெளியிட்ட பின்பு இந்நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 புள்ளிகள் உயர்ந்து 2266.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications