இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை 3800 கோடியை எட்டும்!!
மும்பை: ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான மென்பொருள் சந்தை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கிறது. 2016ஆம் ஆண்டில் இச்சந்தை 626.23 மில்லியன் டாலர் மதிப்புடையதாக உருமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இண்டர்நேஷ்னல் எக்கனாமிக் ரிலேஷன்ஸ் (ICRIER) அமைப்பின் தகவல் படி இந்தியாவின் மொபைல் ஆப் சந்தை தற்போது 150 மில்லியன் டாலராக உள்ளது (அதவது 900 கோடியாக உள்ளது.).
இந்தியாவில் 3 இலட்ச ஆப் டெவலப்பர்கள் உள்ளனர், மேலும் ஒரு மாதம் 100 மில்லியன் ஆப்புகள் டவுன்லோடு செய்யப்படுகின்றன. இதனால் இச்சந்தை பல பரிமானங்களில் உருவெடுக்க துவங்க உள்ளதாகவும் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications