கொல்கத்தா: இந்தியாவின் முதன்மை மேலான்மை கல்லுரிகளில் ஒன்றான ஐஐஎம் கொல்கத்தாவின் இரண்டு வருட டிப்லோமா படிப்பிற்கான கட்டணத்தை 13.5 இலட்சத்தில் இருந்து 16.2 இலட்சமாக ஆதாவது 20 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அக்கல்லூரி நிர்வாகம் தெரிவத்தது.
இக்கல்லூரி கடந்த 2010ஆம் வருடத்தில் தனது இளநிலை மற்றும் முதுநிலை படிப்பிற்கு கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து இக்கல்லூரியின் தலைவர் அஜித் பாலக்கிருஷனனிடம் கேட்டபோது "நான்கு வருட படிப்பிற்கான கட்டணத்தை மாற்றவில்லை, அதேபோல் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் பெங்களூர் கல்லுரிகளுக்கு இணையாக எங்களது கல்வி சேவையை அளிக்க இந்த கட்டண உயர்வு மிகவும் அவசியமானது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த கட்டண உயர்வினால் கல்வி உதவி தொகையும் அதிகரிக்கும். தற்போது ஐஐஎம் கொல்கத்தா 5 கோடி அளவில் உதவி தொகையை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
கடந்த வருடம் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் பெங்களூர் ஆகிய கல்லூரிகள் தங்களது கட்டணத்தை 7 முதல் 13 சதவீதம் வரை உயர்த்தியது.