சியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ பில் கேட்ஸ் அவர்களை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. 1975ஆம் ஆண்டு பில் கேட்ஸ் அவர்களின் பள்ளி நன்பர்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவங்கினார். இன்றளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் உலகின் மிகச்சிறந்த நிறுவனமாக கருதப்படுகிறது.
இந்நிறுவனத்தில் பில் கேட்ஸ் தான் அதிக பங்கு மதிப்புடையவராக இருக்கிறார், நிறுவனத்தில் மட்டும் இல்லை உலகளவில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் தொடந்து 10 வருடமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த மென்பொருள் விற்பனை ஜாம்பவான், கடந்த 12 வருடங்களாக ஒவ்வொரு காலாண்டிற்கும் தனது பங்குகளில் 20 மில்லியன் பங்குகளை விற்று வருகிறார்.
பங்கு விற்பனை திட்டம்
இந்த பங்கு விற்பனை முறையை அவர் தொடர்ந்தால் இன்னும் நான்கு வருடங்களில் பில் கேட்ஸிடம் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு கூட இருக்காது.
மைக்ரோசாப்ட் நிறுவனர்
இவர் பங்கு விற்பனையை நிறுத்தவில்லை என்றால் நான்கு வருடத்திற்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனவராக இவர் இருக்க முடியாது. மேலும் நிறுவனத்தின் அடிப்படை உரிமைக்கூட இவருக்கு கிடைக்காது.
ஸ்டீவ் பால்மர்
இந்நிறுவனத்தின் பில் கேட்ஸ் பிறகு நிறுவனத்தின் அதிக பங்கு உடையவர் இந்நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ ஸ்டீவ் பால்மர் தன் பங்குகளை விற்க்காமல் அதே நிலையில் வைத்துள்ளார்.
பங்கு சந்தையின் அறிக்கை
அமெரிக்க பங்கு சந்தையின் தகவல் படி 2014ஆம் ஆண்டின் பங்கு விற்பனைக்கு பின்னர் பில்கேட்ஸிடம் தற்போது 330 மில்லியன் பங்குகள் உள்ளது, அதேபோல் ஸ்டீவ் பால்மரிடனம் 333 பில்லியன் பங்குகள் உள்ளதாக தாமஸ் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
தொண்டு நிறுவனம்
கடந்த 6 வருடமாக பில் அண்டு மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் அதிகளவில் நிதிகளை அளித்துள்ளதால் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு குறைந்து வருகிறது.