மும்பை: 24 நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில் இந்தியாவில் புதிய வங்கிகளை திறக்க ரிசரவ் வங்கிகளிடம் ஒப்புதல் பெற்ற இரு நிறுவனங்களில் ஒன்று பந்தன் பைனான்சியல் சர்வ்ஸ் என்னும் ஒரு சிறிய நிதிநிறுவனம். வங்கிகள் திறக்க ஒப்புதல் பெற்ற இந்நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவில் 600 வங்கிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த கிளைகள் அனைத்தும் பெருவாரியாக கிராமபுறங்களில் அமைக்க இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
2014ஆம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் புதிய வங்கிகளை திறக்க இந்நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.
சந்திரா சேகர் கோஷ்
இந்நிறுவனத்தின் தலைவர் திரு. சந்திரா சேகர் கோஷ் கூறுகையில் "தற்போது நாங்கள் இந்தியாவில் 600 முதல் 700 வங்கிக் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதில் சில வங்கிக்கிளைகள் ஏற்கனவே செயல்பட்டு வருபவை."
80% வங்கி கிளைகள்
பந்தன் வங்கிக்கிளைகளில் 80 சதவீத கிளைகள் இந்திய கிராம்புறங்களில் மட்டுமே செயல்படும், மதிமுள்ள 20 சதவீதம் மட்டுமே நகரபுறங்களில் செயல்படும் என திரு.கோஷ் தெரிவித்தார்.
2016 வருடம் அல்ல வங்கி கிளைகள்
தற்போது பந்தன் நிறுவனம் இந்தியாவில் 2,016 கிளைகள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இதில் மேற்கு வங்கம் பகுதியில் மட்டும் 50 கிளைகள் உள்ளது.
நிறுவனத் துவக்கம்
பந்தன் நிறுவனம் 2001ஆம் ஆண்டு வெறும் 2 இலட்ச ரூபாய் பணத்துடன் துவங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் சுமார் 6,200 கோடி ரூபாய் வரை கடன் அளித்துள்ளது. மேலும் மைக்ரோ நிதியியல் துறையில் பந்தன் நிறுவனம் 25 சதவீத பங்கை உடையது.
முதலீட்டாளர்கள்
ஐஎஃப்சி மற்றும் எஸ்ஐடிபிஐ நிறுவனங்களின் முதலீட்டின் மூலம் பந்தன் நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் வங்கிச் செயல்பாடுகளை தொடர உள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய பல வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்கள் வரிசைகட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications