மும்பை: பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்து வருவதினால் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் வளர்ச்சியை கண்டுள்ளது இதன் காரணமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த வாரம் உயர்வடைந்தது.
ஆசியாவின் மூன்றாவது சிறந்த பொருளாதாரா நாடாக விழங்கும் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வருகிற மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கையிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆர்பிஐ
ஏப்ரல் 25, 2014 -ல் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு அதன் முந்தைய வாரத்தில் இருந்தததை விட 500 மில்லியன் டாலர்கள் உயர்வடைந்தது என்று ஆர்பிஐ கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிறது.
நாணய சந்தை
டாலர்களில் முதலீடு செய்யப்பட்டும் மேலும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் உள்ளடக்கிய அமெரிக்க டாலர் அல்லாத பிற நாணயங்களான யூரோ, பவுண்ட் மற்றும் யென் ஆகியவையும் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
அன்னிய கையிருப்பு
மேலும் 2014, ஏப்ரல் 25 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய கையிருப்பு முந்தைய வாரத்தை விட 493.2 மில்லியன் டாலர் உயர்வடைந்து 293 பில்லியன் டாலராக இருந்தது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நாணய சொத்துக்கள்
அந்நிய நாணய சொத்துக்களே நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் முக்கியமான காரணியாக உள்ளது பங்காற்றுகின்றன.