வாஷிங்டன்: உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் அதன் துணை நாடான ரஷ்ய தலையிட்டதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிரிப்பை தெரிவித்தது. இதை சற்றும் பொருட்படுத்தாமல் ரஷ்ய அரசு செயல்பட்டு வருகிறது.
இச்செயலை எதிர்த்து அமெரிக்க சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய நாட்டின் சில் முக்கிய புள்ளிகளின் வங்கி கணக்கை முடக்கியது, மேலும் சிலரின் கணக்குகளின் ஏடிஎம் மற்றும் பரிமாற்ற சேவையை மட்டும் முடக்கியது. ரஷ்யா அமெரிக்காவிடம் பெற்ற சில உதவிகளின் வங்கிச் சேவையும் ஒன்று. இதனை பயன்படுத்தி அமெரிக்க அரசு இத்தகைய பணிகளை செய்து வருகிறது.
வரி விதிப்பு
மேலும் அமெரிக்க அரசு தற்போது அமெரிக்க வங்கிச் சேவை பெறும் ரஷ்ய வங்கிகளின் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க, அமெரிக்க நிதித்துறை முடிவு செய்துள்ளது.
பொருளாதார தடை
இந்த அதிகப்படியான வரி வதிப்பு பொருளாதார தடையை விட மோசமானது என ரஷ்ய நிதியியல் வல்லுனர்கள் தெரவித்துள்ளனர். இதனால் ரஷ்ய பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்.
வர்த்தகம்
இந்த சட்டதிருத்ததால் அமெரிக்காவில் செயல்படும் ரஷ்ய நிறுவனங்களும், அமெரிக்க உதவி பெரும் ரஷ்ய நிறுவனங்களுக்கம் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய இடையூர் ஏற்படும். இதன் இருநாடுகளுக்கும் மத்தியில் இருக்க விரிசல் மேலும் அதிகரிக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி
வர்த்தக பரிமாற்றத்தில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்க 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பில்லியன் டால்ர மதிப்புள்ள பொருட்களை ரஷ்ய அமெரிக்காவில் இருந்து இற்குமதி செய்யதுள்ளது.
அமெரிக்காவின் மேலாதிக்கம்
அமெரிக்காவின் அட்டூழியம் தாங்க முடியாமல் ரஷ்ய பிரதமர் புடின் சீனா மற்றும் ஜாப்பான் நாடுகளை போல் ரஷ்யவும் தன்னிச்சையாக செயல்பட வேண்டும், இதற்கான திட்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவும் அவர் உத்தவிட்டார்.