ரூ.2,400 கோடி மதிப்பு நார்வே ஒப்பந்தத்தை தட்டிச் சென்ற எச்.சி.எல்!!

பெங்களுரூ: இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம் நார்வே டிஎன்பி வங்கிக் கிளைகளுக்கு ஐடி சேவை வழங்குவதற்காக சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் 6.5 வருடத்திற்கு தொடரும்.

நார்வேவில் இருக்கும் டிஎன்பி வங்கியின் வர்த்தகத்திற்கும், வெளிநாடுகளில் இருக்கும் அதன் கிளைகளுக்கும் ஐடி இன்ப்ராஸ்டக்சர் சேவை மற்றும் அப்பிளிக்கேஷன் ஆப்பிரேஷன்ஸ் ஆகிய வழங்க ஹெச்சிஎல் நிறுவனம் முற்பட்டுள்ளது.

டிஎன்பி வங்கி

டிஎன்பி வங்கி

நார்வே நாட்டின் வங்கித்துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்வது டிஎன்பி வங்கி, இவ்வங்கி 2.5 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி கடன், சேமிப்பு, ஆலோசனை, இன்சூரன்ஸ், மற்றும் ஒய்வுதியம் ஆகிய சேவைகளை பொதுமக்களுக்கும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறது.

எச்.சி.எல்

எச்.சி.எல்

நார்வே நாட்டின் ஐடி துறையில் ஈடுபட இந்நிய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உலக நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்தகைய பெரும் ஒப்பந்தத்தை பெற்ற எச்.சி.எல் நிறுவனம் மிகவும் திறன் வாய்ந்ததாக உள்ளதை படைசாற்றுகிறது. எச்.சி.எல் நிறுவனம் நார்வே நாட்டின் ஸ்டாட்ஆயில் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு ஐடி சேவை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

டேட்டா சென்டர்

டேட்டா சென்டர்

டிஎன்பி வங்கியில் சுமார் 7 டேட்டா சென்டர்கள் நாடு முழுவதும் உள்ளது. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இரண்டு டேட்டா சென்டராக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம் என ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆஷிஷ் குப்தா தெரிவித்தார்.

18 மாதம்

18 மாதம்

வங்கி விபரங்களை அடுத்த 18 மாதங்களில் இந்தியாவில் இருந்தும் ஒஸ்லோவில் இருந்தும் மாற்றியைமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+