நைஜீரியா: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் உள்ள தனது வாடிக்காயாளர் சேவையும் மற்றும் திறன் வாய்ந்த சேவையை அளிக்கவும் சுமார் 1 பில்லியன் டாலர் செலவிட போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை பற்றி இந்நிறுவனத்தின் சிஇஓவான சுனில் மிட்டல் கூறுகையில் "இந்த 17 நாடுகளிலும் நாங்கள் அதிகப்படியா முதலீட்டை செய்துள்ளோம், மேலும் ஒவ்வொரு வருடத்திலும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை மட்டுமே முலதனமாக செய்து வருகிறோம், இவ்வருடமும் 1 வருடம் என எங்களது முதலீட்டு இலக்கை நிர்ணயம் செய்துள்ளம்" என கூறினார்.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் 2010ஆம் ஆண்டு குவைத் டெலிகாம் நிறுவனமான ஜெயின் நிறுவனத்தை 9 பில்லியன் டாலருக்கு கைபற்றிய பின்பு தான் தன் செயல்பாட்டை துவங்கியது. ஆப்பிரிக்காவின் தொலைதொடர்புசேவையில் முன்றில் ஒரு பங்க பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது.
ஆப்பிரிக்காவில் ஏர்டெல்
இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா செயல்பாட்டின் மூலம் பெற்றும் வட்டி, வரி மற்றும் செலவு ஆகியவற்றைவிட 2.5 மடங்கு லாபம் பெருகிறது இதனால் இந்நிறுவனம் ஆப்பிரிக்காவில் வலிமையாகவே உள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ஆப்பிரிக்காவின் எம்டிஎன் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை தருவதாக உள்ளது. இந்நிறுவனம் தனது சில தொலைதொடர்பு கோப்புரங்களையும், எடிஸ்லாட் நிறுவன பங்குகளையும் விற்றுள்ளது குறிப்பிடதக்கது.
நிறுவன மதிப்பு
2013ஆம் ஆண்டின் கணிப்பின் படி ஏர்டெல் நிறுவனம் 4.4 பில்லியன் மதிப்புடையதாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications