சேலம்: தென் இந்தியாவில் +2 தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் கல்லுரிகளில் சேர துவங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் உயர்படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி கடன் வழங்க கனரா வங்கி அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று நேரடியாக வழங்கி வருகிறது.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனரா வங்கி அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருந்தால் அனைத்துவித கடன்களும் கனரா வங்கியில் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சேலத்தில் தனி வங்கி தொடங்கப்படும் அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளில் வராக் கடன் அதிகரித்தால் வங்கிகள் தற்போது நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனை குறைத்துள்ளது, இதன் எதிரொலியாக கல்வி கடன் அதிகப்படியாக வழங்க வங்கிகள் தெரிவித்துள்ளது. நிறுவனங்களில் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியவில்லையாம், ஆதனால் இந்த முடிவுக்கு வந்துள்ளநர் வங்கிகள்.