டெல்லி: மொரீசியஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாக நிதியமைச்சகத்தின் தகவல் அறிக்கை தெரவித்துள்ளது.
ஏப்ரல் 2013 முதல் கடந்த பிப்ரவரி 2014 வரை அந்த நாடு 4.48 பில்லியன் டாலர்கள் மட்டுமே மொரீசியஸ் நம் நாட்டில் முதலீடு செய்துள்ளது என்றும், ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொரீசியஸ் செய்த முதலீட்டுத் தொகை 8.97 பில்லியன் டாலர்கள் என்றும் இந்திய தொழில் திட்ட மற்றும் முன்னேற்றத் துறை (டி.ஐ.பி.பி) அறிவித்துள்ளது.
முதலீட்டு வீழ்ச்சி
அந்நிய நேரடி முதலீட்டில் நிறைய வரிச் சலுகைகளை இந்தியா அறிவித்திருந்ததால் மொரீசியஸ் நாட்டிலிருந்து தாறுமாறாக முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு பல வரிச் சலுகைகளை இந்தியா அதிரடியாக ரத்து செய்துவிட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வரிச் சலுகைகள் குறைந்து போனதுதான் இந்த முதலீட்டு வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
முதலீடு
கடந்த சில ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்த நாடுகளில் மொரீசியஸ் நாடும் ஒன்று. ஏப்ரல் 2000 முதல் பிப்ரவரி 2014 வரை 78.15 பில்லியன் டாலர்கள் வரை மொரீசியஸ் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
மொரீசியஸ்
இந்தியாவுக்குக் கிடைக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 37 சதவீதம் மொரீசியஸ் நாட்டிலிருந்துதான் கிடைத்துள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 20 லட்சம்தான் என்பதும் அதன் உள்நாட்டு வர்த்தக மதிப்பு (ஜி.டி.பி.) சுமார் 10 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடு குறைவு
இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடே கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளதாகவும் டி.ஐ.பி.பி. கூறியுள்ளது. ஏப்ரல் 2012 முதல் கடந்த ஜனவரி 2013 வரை கிடைத்த முதலீடு 19.10 பில்லியன் டாலர்கள். ஆனால் ஏப்ரல் 2013 முதல் கடந்த ஜனவரி 2014 வரை 18.79 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!



Click it and Unblock the Notifications