பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் உள்ள பெய்ஜிங் கேப்பிடல் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் விமான போக்குவரத்து மற்றும் பயனியர்களின் நெரிசல் அதிகரித்துள்ளது, இதனால் 14 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு பதிய ஏர்போர்ட் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஜின்ஜெங் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் கலவரம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு சீன அரசு ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இப்புதிய விமான நிலையம் சீனாவின் ஹெபெய் பகுதியில் அமைய உள்ளதாகவும், இதில் வருடத்திற்கு 72 மில்லியன் பயணிகளையும் மற்றும் 2 மில்லியன் டன் சரக்குகளை போக்குவரத்தை சமாலிக்கும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என இந்நாட்டின் சுற்றப்புறசூழல் பாதுகாப்பு இயக்குநரகம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் கேப்பிடல் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்
இந்த விமான நிலையம் 1958ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்விமான நிலையத்தின் கொள்ளளவ 80 மல்லியன் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 83 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் விமான நிலையத்தின் தூய்மை மற்றும் சேவை தரம் குறைந்துள்ளது.
சீனா விமான நிலையங்கள்
சீனாவில் உள்ள விமான நிலையங்களில் வருடத்திற்கு சுமார் 754 மில்லியன் பயணிகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு வருடத்திற்கு பயணிகளின் எண்ணிக்கை சற்றும் குறையமல் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கலவரம்
சீனாவில் ஏர்போர்ட் மிகவும் குறைவாக உள்ளதால் போக்கவரத்து நெரிசல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஜின்ஜெங் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் கடுமையான நெரிசல் ஏற்ப்பட்டது. இதனால் விமான போக்குவரத்துக்கு தாமாதம் அதிமானதினால் பயணிகள் கலவரத்தில் ஈடுப்பட்டனர்.
பொருட் சேதம்
கலவரத்தின் எதிரொலியாக விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அங்கு இருக்கும் கம்பியூட்டர்களை அடித்து உடைத்தனர். சில பயணிகள் விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் சென்று கட்டுப்பாட்டு ஆணையர்களை தாக்கியதாக சீன செய்தித்தாள்கில் தகவல் வெளியானது.


Click it and Unblock the Notifications