இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உயரும்!! மார்கன் ஸ்டான்லி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பொருளாதாரம் குறித்து மார்கன் ஸ்டான்லி நிறுவனம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது, அதில் இந்தியா அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சராசரியாக 6.75 சதவீத வளர்ச்சி பெறும் என தெரவித்துள்ளது.

இந்தியாவில் 10 வருடங்களில் ஏற்படும் ஆட்சிமாற்றம், கொள்கை சீர்திருத்தங்கள், மற்றும் மந்த நிலை விலகும் சாத்திய கூறுகள் தென்படுவாதல் பொருளாதாரா வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உயரும்!! மார்கன் ஸ்டான்லி

மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 லட்சம் கோடி டாலரை தாண்டும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த மதிப்பை எட்டியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இதுமட்டும் அல்லாது சர்வதேச அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10வது இடத்தில் இருக்கும் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களாக நாட்டின் பணவீக்கத்தை குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் பலனாக தற்போது இந்திய பொருளாதாரம் முன்னேற்றத் துவங்கியுள்ளது. மேலும் புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Morgan Stanley Sees Indian Economy Crossing $5 Trillion by 2025

With an improvement in macroeconomic indicators and steady implementation of policy reforms, the Indian economy is likely to cross the $5-trillion mark by 2025, Morgan Stanley said in a report.
Story first published: Wednesday, May 14, 2014, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X