மும்பை: கடந்த ஒரு வாரமாக இந்தியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி தென்படுகிறது, அதன் எதிரொலியாக அமெரிக்கா டலாருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 10 மாத உயர்வை எட்டியது. மேலும் ரூபாய் மதிப்பு உயர்விற்கு அதிகப்படியான அன்னிய முதலீடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இன்றைய வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.51 ரூபாயாக துவங்கியது பின்பு 59.21 ரூபாய் வரை உயர்வை தழுவியது குறிப்பிடதக்கது.

அன்னிய முதலீடு அதிகரித்தன் காரணமாக இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது என ஃபஸ்ட்ரான்டு பாங்க் லிமிடெட் நிறுவனத்தின் கருவுல மேலாளர் ஹரிஹர கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் மே மாத துவக்கும் முதல் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்கு சந்தையில் 1.65 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளனர், அதேபோல் 635 மில்லியன் டாலரை இந்தியா சந்தையில் இருந்து திரும்பப்பெற்றுள்ளதாக செபியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications