டெல்லி: நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நிதியமைச்சர் யாராக இருக்கும் என பலரும் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் கிடைத்த சில தகவலின் படி எச்.டி.எஃப்.சியின் வங்கியின் சேர்மன் தீபக் பராக் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தகவல் கிடைத்ததுள்ளது.
நிரேந்திர மோடி அவர்களின் இந்த முடிவு சரியானதா? இல்லை தவறானதா? என செய்திகள் வருவதற்குள், இத்தகவலை கேட்ட தீபக் பராக் "நான் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்படவில்லை, இதுகுறித்து வந்த தகவல் அனைத்தும் பொயானது" என கருத்து தெரிவித்துள்ளார்.
பயபுள்ளைக்கு உள்ள ஆசை இருக்கு
இதை பற்றி அவரிடம் பேசும்போது, அரசு கேட்டாலும் பதவியை ஏற்க மாட்டீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதல் அளித்த அவர் , அரசு கேட்டால் எப்படி மறுக்க முடியும் என அவர் பதில் அளித்தார்.
சிதம்பரத்திற்கு பாராட்டு
மேலும் அவர் தற்போதைய நிதியமைச்சரான சிதம்பரம் செய்த பணிகளை செம்மையாக செய்தார் என பாராட்டினார்.
சிறப்பான தேர்வு அவசியம்
இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் திறமையானவரை மட்டுமே நிதியமைச்சகத்தில் அமர்த்த வேண்டும், தற்போது சிறப்பாக செயல்படும் இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் கனவு என தீபக் பராக் தெரிவித்தார்.
மே 26
வருகிற மே 26ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதிவியேற்கிறது.