டெல்லி: இந்தியாவில் அதிகளவில் முதலிடு செய்யும் நாடுகளில் மொரிஷியஸ் பல வருடங்களாக முதல் இடத்திலே இருந்தது, ஆனால் சில முக்கிய காரணங்களால் மொரிஷியஸ் நாட்டில் இருந்து பெறப்படும் முதலீட்டை இந்தியா குறைத்து கொண்டது. இதனால் இப்போது இந்தியாவின் நட்பு நாடான சிங்கப்பூர் தற்போது முதல் இடத்தை பெற்றுள்ளது.
டெல்லி: மேலும் நரேந்திர மோடியின் வெற்றிக்கு பெற்ற பிறகு இந்திய சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைத்தது குறிப்பிடதக்கது. பொதுவாக இந்தியாவில் எந்த ஒரு கட்சி மாறினாலும் பங்கு சந்தை மற்றும் இந்திய பொருளாதாரம் இத்ததைய ஒரு சிறப்பான நிலையை எட்டும் என்பதே நிதர்சனம்.
சிங்கப்பூர் - மொரிஷியஸ்
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் தகவல் படி இந்திய சந்தையில் சிங்கப்பூர் 2013-14ஆம் ஆண்டில் சமார் 6 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, கடந்த நிதியாண்டில் வெறும் 2.3 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்தது குறிப்பிடதக்கது. மொரிஷியஸ் நாடின் முதலீடு சிங்கப்பூர் நாட்டிற்கு தலைகீழ்.
மொரிஷியஸ்
2012-13ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் 9.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த மொரிஷியஸ், தற்போது 4.9 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இதர நாடுகள்
சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்ததால், இங்கிலாந்து 3.2 பில்லியன் டாலர் மூதலீடு செய்து முன்றாம் இடத்தையும், ஜப்பான் 1.7 பில்லியன் டாலர் முதலீடு செய்து 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. கடைசியாக அமெரிக்கா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து இப்பிட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
வரலாறு
கடந்த 2000ஆம் அண்டு முதல் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளில் மொரிஷியஸ் 36 சதவீதமும், அதை தொடர்ந்து சிங்கப்பூர் 12 சதவீதமும், இங்கிலாந்து 10 சதவீதமும் முதலீடு செய்துள்ளது.