மும்பை: வங்கி சேவையை இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் வங்கிகள் அல்லாத முன்று நிதியியல் நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் ஏடிஎம்களை அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
பிடிஐ பேமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.ஆர்.ஈ.ஐ இன்பராஸ்டக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரித்திசித்தி புள்ளியன்ஸ் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு வொயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க ஒப்புதல் பெற்றதாக ரிசர்வ் வங்கி இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் சேவை
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஏடிஎம்கள் அனைத்தும் வங்கிகளுடையதே, ஆனால் சில ஏடிஎம் மெஷின்கள் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவையே நாம் வொயிட் லேபிள் ஏடிஎம் என்று அழைக்கிறோம்.
தற்போது செயல்படும் நிறுவனங்கள்
இந்தியாவில் வொயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க ஏற்கனவே நான்கு நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளது. அவை டாடா கம்யூணிகேஷசன்ஸ் பேமண்ட் சொல்யூஷன்ஸ், ப்ரிசிம் பேமண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட், முத்தூட் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் வக்ரங்கீ லிமிடெட் அகிய நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி
ஜூன் 2012ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் வங்கி அல்லாத நிதியியல் நிறுவனங்கள் ஏடிஎம்களை அமைக்க சட்டம் கொண்டு வந்தது. அதற்கு முன்பு வங்கிகள் மட்டுமே இந்தியாவில் ஏடிஎம் அமைக்க முடியும்.
வொயிட் லேபிள் ஏடிஎம்
இத்தகைய ஏடிஎம்களை அமைப்பதன் மூலம் இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் இருக்கும் மக்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கும் நோக்கத்துடனே இத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது.