மும்பை: இந்தியாவில் புகைபிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்ததே இல்லையாம்!!. ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் புகையிலை பற்றி எடுத்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 10-ல் 9 பேர் புகைப்பழக்கத்தை விட்டொழிக்க முயற்சி செய்ததில்லை என்று கண்டறிந்துள்ளது.
புகையிலை பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களின் சமூக மற்றும் உளவியல் வாழ்க்கை முறையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பல்வேறு வகையிலான புகையிலான பயன்பாட்டு வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவில் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 1,111 பேர்களிடம் இந்த சர்வே செய்யப்பட்டது.
மேலும், 70% பேர் சிகரெட்டுடன் புகையிலைப் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர் என்றும் மற்றும் வாரத்திற்கு ரூ.380/- ஐ இதற்காக செலவு செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று எண்ணுபவர்கள் 62% பேரும், பணிச்சுமையின் காரணமாக புகைப்பழக்கம் கொண்டவர்கள் 54%- பேரும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையால் புகைப்பழக்கத்தை அதிகரித்துக் கொண்டவர்களாக 42% பேரும் உள்ளனர்.
இந்த சர்வேயில் கண்டறியப்பட்ட முக்கியமான தகவல்கள்
மும்பை
மும்பையைச் சேர்ந்தவர்களில் 41% பேர் சிகரெட் பயன்படுத்துவதை கடந்த 2-3 ஆண்டுகளில் அதிகரித்தும், 14% பேர் பயன்பாட்டை குறைத்தும் உள்ளனர்.
மன அழுத்தம்
புகைப்பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று எண்ணுபவர்கள் 62% பேரும், பணிச்சுமையின் காரணமாக புகைப்பழக்கம் கொண்டவர்கள் 54% பேரும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையால் புகைப்பழக்கத்தை அதிகரித்துக் கொண்டவர்களாக 42% பேரும் உள்ளனர்.
4 முதல் 5 சிகரெட்
மும்பையில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 சிகரெட்களை புகைக்கின்றனர், பதிலளித்தவர்களில் மும்பையில் வசித்து வருபவர்களில் 95% பேர் புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க முயற்சி செய்ததே இல்லை.
புகையிலை
மும்பையைப் பொறுத்த வரையில் புகையிலை மெல்லுவதும், பீடி புகைப்பதும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற போதைப்பழக்கங்களாக உள்ளன.
உடல் நல கேடு
புகையிலையை நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தாலும் உடலுக்கு மோசமான விளைவுகள் எதுவும் வரவில்லை, ஆனால் புகையிலையால் மோசமான விளைவுகள் வரும் என்று மும்பையில் பதிலளித்தவர்களில் 54% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
இன்சூரன்ஸ்
பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பையில் தான் மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான மோசமான உடல் கோளாறுகளுக்கு ஏற்ற இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இதில் புகையிலை மெல்லும் பழக்கமும் அடங்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications