சென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மே மாதம் அதிகரித்து, நாட்டில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் டாலர் மற்றும் அன்னிய நாணயங்களின் இருப்பு அதிகரித்து இந்திய ருபாய் மதிப்பு 58 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதில் மஹிந்திரா நிறுவன தனது இரு சக்கர வாகன விற்பனையில் 131 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. மேலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை மிகுந்த புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதி விவரங்களை பார்போம்.
மஹிந்திரா & மஹிந்திரா
இந்நிறுவனத்தின் இந்திய விற்பனை கடந்த மே மாதத்தில் மட்டும் 131 சதவீத உயர்வை பெற்றுள்ளது, அதேபோல் 946 இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இதன் மதிப்பு 16.5 பில்லியன் டாலர்.
ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதம் 602,481 வாகனங்களை விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்வாகும். மேலும் இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பிரிந்ததை தொடர்ந்து இந்நிறுவனம் தொழில்நுட்பத்தில் அதிகப்படியாக முதலீடு செய்து வருகிறது.
டிவிஎஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,10,293 வாகனங்களை விற்று 27.33 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 90,560 கார்களை விற்றுள்ளது, அதேபோல் 10,365 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
பஜாஜ் ஆட்டோ
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனையில் 4 சதவீத உயர்வும், ஏற்றுமதியில் 40 சதவீத உயர்வும் கண்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்
இந்தியாவின் இரண்டாம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் 12.8 சதவீத உயர்வடைந்துள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பரிவின் தலைவர் ராகேஷ் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications