மும்பை: அதிகமாக வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் ஒரு நர்செய்தி. பொதுவாக இந்தியர் அல்லது வெளிநாட்டினர்( பாகிஸ்தான் மற்றும் பாங்களதேஷ் மக்கள் அல்லாதோர்) வெளிநாடுகளுக்கு செல்லும் போது 10,000ரூபாய் மதிப்புடைய இந்திய ரூபாய் மட்டுமே எடுத்து செல்ல முடியும்.
இந்த வரம்பை தற்போது ரிசர்வ் வங்கி 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனால் பணிகள் அதிகளவில் இந்திய ரூபாயை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கும். மேலும் வெளிநாடுகளுக்கு தனிநபர் மற்றும் சிறு நிறுவனங்கள் பணம் அனுப்பும் வரம்பை ரிசர்வ் வங்கி 75,000 டாலர்களில் இருந்து 125,000 டாலராக உயர்ந்துள்ளது.

அபெக்ஸ் வங்கியின் அறிக்கையின் படி "பண பரிமாற்ற சந்தை நிலையற்ற தன்மையில் இருந்து நிலைபெற்றுள்ளது, இந்நிலையில் வரம்பு நிலையை 125,000 உயர்த்துவதன் மூலம் சந்தை புதிய உயரங்களை எட்டும், மேலும் இதை வர்த்தகம், லாட்டரி போன்ற பரிமாற்றங்களுக்கு அமல்படுத்தக் கூடாது" என இவ்வங்கி கூறியது.
மேலும் வெளிநாடுகளில் அதிகரித்து வரும் மருத்துவம் மற்றும் படிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு பரிமாற்ற வரம்பை 75,000 டாலர்களில் இருந்து 125,000 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications