மும்பை: மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியிடும் முதல் நிதியியல் கொள்ளையை இன்று மாலை ரிசர்வ வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட உள்ளார். நாட்டில் பணவீக்கத்தை குறைக்க நிதியமைச்சகத்துடன் இணைந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறது ரிசர்வ் வங்கி.
மேலும் நிதியியல் வல்லுனர்களின் கணிப்பின் படி ரிசிர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான ரெப்போ விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து மாற்றாது என தெரிவிக்கின்றன.
நிதியியல் கொள்கை
மேலும் கடந்த நிதியியல் கொள்கையில் ரிசர்வ் வங்கி பணபுழக்க விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து 23 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக குறைத்தது. அதை மாற்றாமல் இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்காமல் இருக்கும்
தங்க இறக்குமதி
தங்க இறக்குமதியில் செய்த சில தளர்வுகளால் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக டாலருக்கும் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக ரூபாய் மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது குறிப்பிடதக்கது. இன்றைய வர்த்தக நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.32 ரூபாய் ஆகும்.
ரகுராம் ராஜன்
ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை எடுத்து கொண்ட பின்பு நாட்டில் நிலவிய கடுமையான நுகர்வோர் பணவீக்கத்தை குறைக்க ரெப்போ விகிதத்தை சுமார் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தார்.
ராஜன் - ஜேட்லி
இந்தியாவின் நிதியமைச்சரான அருண் ஜேட்லி நாட்டின் வளர்ச்சியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய இலக்குகளை நிர்னயம் செய்து கொண்டு ராஜன் உதவியுடன் செயல்பட்டு வருகிறார் ஜேட்லி. அந்த இலக்குகளை இப்போது பார்போம்.
இலக்குகள்
ஜனவரி 2015ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நுகர்வோர் பணவீக்க குறியீடு 8 சதவீதமாக குறைக்கவும், 2016ஆம் ஆண்டில் அதை 6 சதவீதமாக குறைக்கு வேண்டும் என்றும், மேலும் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை எட்ட வேண்டும் என்பதும் ஆகும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications