சென்னை: இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனமான ஏர்ஏசியா தனது விமான சேவையை வரும் ஜூன் 12ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையை கடந்த மே 30ஆம் தேதியில் துவங்கியது.
இந்நிறுவனத்தின் முத்ல பயனம் பெங்களுரூ முதல் கோவா வரை, இப்பயனத்திற்கான டிக்கெட் விற்பனையை துவங்கி 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது.
48 மணிநேரம்
மேலும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் கடந்த 48 மணிநேரத்தில் சுமார் 25,000 டிக்கெட்டுகளை விற்றுள்ளது. மேலும் நிறுவனதுவக்க சலுகையாக இந்நிறுவனம் ஒரு வழி பயணத்திற்கு ரூ.999 என்ற கட்டணத்தை அளித்தது.
999 ரூபாய் கூத்து
இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு நிறுவனமும் இத்தகைய குறைந்த விலை விமான கட்டணத்த அளிக்கவில்லை. இந்த சலுகை விலை கட்டணத்தை பயன்படுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விமான பயன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஸ்பைஸ்ஜெட்
ஏர்ஏசியா சந்தையில் இறங்கிய முதலே இந்நியாவின் அனைத்து நிறுவனங்களுக்கும் பலத்த அடி. இந்த போட்டியில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒரு சூப்பரான ஆஃப்ரை அறிவித்தது. இந்தியாவில் எந்த ஒரு பயனத்திற்கு 2,999 ரூபாய் என்ற கட்டணத்தில் சலுகையை அள்ளி விசி வருகிறது.
மித்தூன் சந்தில்யா
மேலும் இந்நிறுவனத்தின் சிஇஓவான மித்தூன் சந்தில்யா கூறுகையில் "இந்த சலுகை கட்டணத்தின் மூலம் இந்தியா மக்களிடம் நாங்க மிகவும் விரைவாக சென்று அடைந்துள்ளோம். இதற்கு உதாரணமே 28,000 பயண டிக்கெட் விற்பனை" என மிகுந்த மிகழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனம் ஏர்ஏசியாவை இணைத்துக் கொண்டு இந்தியாவில் மலிவு விலை விமான சேவையை அளிக்கும் இந்நேரத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றோரு நிறுவனத்தை துவங்க உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவை விட்ட வெளிநாடுகளுக்கும் பயண சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.