பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தில் இருத்து மற்றோரு உயர் அதிகாரி நேற்று வெளியேறினார். இந்நிறுவனத்தின் குளோபல் சேல்ஸ், மார்கெட்டிங் மற்றும் கூட்டமைப்பு பிரிவின் தலைவரான பிரசாத் திரிகூட்டம் அவர்கள் இந்நிறுவனத்தின் வருடந்திர சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் மாநாட்டு இன்னும் 2 மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியது கடுமையான செயல் என்று நிர்வாக குழு தெரிவிக்கின்றனர்.
இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் தற்போதிய நிர்வாக தலைவரான நாராயண மூர்த்தி நிறுவனத்தில் திரும்பிய பிறகு இந்நிறுவனத்தில் இருந்து வெளியே உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை பிரசாத் திரிகூட்டம் அவர்களுடன் சேர்த்து 13ஆக உயர்ந்துள்ளது.
டெல் நிறுவனம்
பிரசாத் இன்போசிஸ் நிறுவனத்தில் வெளியேறிய அதே நாளில் இவரை டெல் நிறுவனத்தின் நிர்வாகம் இணைத்துக் கொண்டது. டெல் நிறுவனத்தில் இவர் தலைவராகவும், அப்பிளிகேஷன் சர்விசஸ் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பெற்றாேர்.
கனக்ட் மாநாடு
இன்போசிஸ் நிறுவனம் மற்றும் இதன் இணை நிறுவனங்களின் மொத்த விற்பனை பிரிவின் கூட்டம் "கனக்ட்" என்ற தலைப்பில் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் 3 நாள் நடக்கிறது. இதில் உலக நாடுகளில் உள்ள அனைத்து விற்பனை பரிவு அதிகாரிகளும் கலந்து கொள்ளகின்றனர்.
பிரசாத் திரிகூட்டம்
கடந்த இரண்டு வருடமாக இந்த மாநாட்டில் பிரசாத் திரிகூட்டம் அவர்களே தலைமை வகுக்கிறார். இக்கூட்டம் இவ்வருட துவக்கத்திலே நடக்க வேண்டியது, நிறுவனத்தின் பட்ஜெட் பிரச்சனையால் ஆகஸ்ட் மாதம் வரை தள்ளிப்போனது
பி.ஜி. ஸ்ரீநிவாஸ்
இந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ என கூறப்பட்டு வந்த ஸ்ரீநிவாஸ் அவர்கள் கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகி, ஹாங்காங் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
யூ.பி.பிரவின் ராவ்
இந்நிலையில் யூ.பி.பிரவின் ராவ் அவர்களை இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினராக இன்போசிஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரசாத் திரிகூட்டம் வெளியேறிய நிலையில் அவரது பொறுப்பையும் பிரவின் ராவ் கவணிக்க வேண்டியுள்ளது.
இன்போசிஸூம்.. பிரசாத்தும்...
கடந்த 20 வருடமாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக செயற்குழுவில் முக்கிய பதவி வகிக்கிறார். இந்நிறுவனத்தின் பீபிஒ பிரிவிக்கு தலைவராகவும் இருந்தார்.