மும்பை: இந்திய சந்தையில் தொடர் இரு வாரங்களாக அன்னிய முதலீடு குறைந்து வரும் நிலையில் கடந்த வாரம் 312.585 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து நாணய சந்தை வலிமையான நிலையில் உள்ளது. ஜூன் 6ஆம் தேதி முதல் அன்னிய நாணய முதலீடு அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த காலகட்டத்தில் நாணய சொத்துக்கள் 285.630 மில்லியன் டாலர் அதிகரித்து 338.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அன்னிய முதலீட்டு சொத்துகளை டாலர் குறியீட்டில் தெரிவித்தாலும், டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற நாணயங்களின் உள்ளீடும் அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தஙக இறக்குமதியில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்தை தொடர்ந்து இந்தியாலவில் தங்க மற்றும் வெள்ளியின் இறக்குமதி அதிகரிக்க துவங்கியது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு குறைய துவங்கியது. கடந்த பல வாரங்களா தங்க இருப்பு மாறாமல் உள்ளது நிலையில் கடந்த வாரம் இதன் மதிப்பு 175.4 மில்லியன் டாலர் குறைந்து 20.79 பில்லியன் டாலராக உள்ளது.
தங்க இறக்குமதி அதிகரித்தை தொடர்ந்து நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications