மும்பை: கிரெடிட் கார்டின் நிலுவை தொகை செலுத்துவதில் கால தாமதத்திற்கான கட்டணத்தை வசூலிக்க ஒரு மாதம் காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று தனியார் மற்றும் பொத்துறை வங்கிகளுக்கு வங்கி கட்டுப்பாட்டு ஆணையமான ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக கிரேடிட் கார்டு வைத்திருப்போர் மாத மாதம் பில்லிங் பெறுவர், இத்தகைய பில்லிங் சைக்கிளிங் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் அல்லது கார்டு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அபராத கட்டணம்
மேலும் உங்கள் கடன் தொகையை வங்கியில் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதமாக தாமதக் கட்டணமாக வங்கிகள் ரூ. 100 முதல் ரூ. 700 வரை வசூலிக்கின்றன.
கடன் தொகையின் அளவு
இத்தகைய கடன் தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், பொரும்பாலன வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடன் தொகைக்கு ஏற்றவாறு தாமதக் கட்டணம் அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும்.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில், கிரெடிட் கார்டின் தவணைத் தொகை கிரெடிட் கார்டு உரிமையாளர் செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத்துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது.
சேவை முடக்கம்
குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.
யாருக்கு பயன்??
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக இது உதவும்.